கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 டிசம்பர், 2015

குமரிக்கண்டம்




ன்னியாகுமரி

உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய 
கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்
செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து 
பயணிக்க உங்களின் பொன்னான 5 
நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான்
 உலகின் முதல் மனிதன் பிறந்ததாக 
வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், 
இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு 
தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் 
தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல 
வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது 
தான்"நாவலன்தீவு"என்று அழைக்கப்பட்ட
"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று 
அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் 
இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக 
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. 

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள 
ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க, இலங்கை,
மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை 
இணைத்தவாறு இருந்த பிரம்மாண்டமான 
இடம்தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்கநாடு,
ஏழுமதுரைநாடு ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்
பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரைநாடு
ஏழுகுரும்பனைநாடு என நாற்பது ஒன்பது 
நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற 
இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. 

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என
 பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் 
இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் 
என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் 
வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது 
தான். 

நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் 
தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் 
முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் 
மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் 
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் 
இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,
கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை 
இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து 
விட்டது .

இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"
நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்
"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,
மாபுராணம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . 
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு 
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் 
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 
புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,
நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள் 
இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான 
தமிழனின் வரலாறு ,இனிமேல் நாம் 2000 
வருடம் பழமையானவர்கள் என்ற பழங்
கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் 
முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று 
பெருமையுடன் கூறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;