சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். செங்கண் நெடியான் சரிதம் என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர். எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
சூளாமணி
சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். செங்கண் நெடியான் சரிதம் என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர். எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.