கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

மணிமேகலை-3

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். இதனைப் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:


வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன்.


(வளங்கெழு = வளம் மிக்க; ஆறைம் = 6x5=30)


இங்குக் கூல வாணிகன் சாத்தன் என்று இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், ‘சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கூல வாணிகன், சீத்தலை என்ற இரு அடைமொழிகள் இவர் பெயரோடு இணைகின்றன. சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் வணிகர்க்கே உரிய பெயர். சீத்தலை என்பது அவரது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். சீத்தலை என்ற ஊர் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது. இவர் மதுரையில் சென்று நெல், வரகு, தினை முதலான தானியங்களை (கூலம்) வியாபாரம் செய்ததால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;