மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். இதனைப் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன்.
(வளங்கெழு = வளம் மிக்க; ஆறைம் = 6x5=30)
இங்குக் கூல வாணிகன் சாத்தன் என்று இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், ‘சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கூல வாணிகன், சீத்தலை என்ற இரு அடைமொழிகள் இவர் பெயரோடு இணைகின்றன. சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் வணிகர்க்கே உரிய பெயர். சீத்தலை என்பது அவரது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். சீத்தலை என்ற ஊர் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது. இவர் மதுரையில் சென்று நெல், வரகு, தினை முதலான தானியங்களை (கூலம்) வியாபாரம் செய்ததால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன்.
(வளங்கெழு = வளம் மிக்க; ஆறைம் = 6x5=30)
இங்குக் கூல வாணிகன் சாத்தன் என்று இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், ‘சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கூல வாணிகன், சீத்தலை என்ற இரு அடைமொழிகள் இவர் பெயரோடு இணைகின்றன. சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் வணிகர்க்கே உரிய பெயர். சீத்தலை என்பது அவரது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். சீத்தலை என்ற ஊர் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது. இவர் மதுரையில் சென்று நெல், வரகு, தினை முதலான தானியங்களை (கூலம்) வியாபாரம் செய்ததால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.