12. வேட்டுவ வரி
கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் | 5 |
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் | 10 |
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் | 15 |
கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது | 20 |
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து மற்றது | 25 |
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து உரிவை மேகலை உடீஇப் பரிவொடு | 30 |
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் பந்துங் கழங்குந் தந்தனர் பரசி | 35 |
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் | 40 |
கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் | 45 |
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் | 50 |
பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் | 55 |
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி | 60 |
கரியின் உரிவை போர்த் தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் | 65 |
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும் அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை | 70 |
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமரிளங் குமரியும் அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே; உரைப்பாட்டுமடை. |
வேறு
நாகம் நாறு நரந்தம் நிரந்தன | 1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே; செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் | 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே; மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் | 3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;
வேறு
கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும்; ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும்; பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் | 6 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும்;
வேறு
ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் | 7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் | 9 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;
வேறு
ஆங்குக், | 10 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு அசுரர் வாட அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;
வேறு
ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப | 11 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும் மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின் காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்; உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை | 12 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்; கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் | 13 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்
வேறு
இளமா எயிற்றி இவைகாண் நின் னையர் | 14 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன; முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் | 15 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன; கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் | 16 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
துறைப்பாட்டுமடை.
வேறு சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் | 17 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே; அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு | 18 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மணியுரு வினைநின மலரடி தொழுதேம் கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே; துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள் அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே;
வேறு
வம்பலர் பல்கி வழியும் வளம்பட | 20 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய் சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்; துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு | 21 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்; பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் | 22 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;
வேறு
மறைமுது முதல்வன் பின்னர் மேய | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே.
13. புறஞ்சேரியிறுத்த காதை
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.