போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி அட்டிற் புகையும் அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் | 125 |
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் | 130 |
பொதியில் தென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர் தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு | 135 |
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் | 140 |
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் மாதவ ரோதி மலிந்த ஓதையும் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் | 145 |
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் | 150 |
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் | 155 |
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் | 160 |
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி | 165 |
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி | 170 |
தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனநடை மாதரும் ஐயனுந் தொழுது | 175 |
பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி | 180 |
வானவர் உறையும் மதுரை வலங்கொளத் தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக் கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்துறு துயரம் | 185 |
ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப் போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப் | 190 |
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் | 195 |
14. ஊர்காண் காதை
புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் | 5 |
ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் | 10 |
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்பக் கோவலன் சென்று கொள்கையி னிருந்த | 15 |
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் | 20 |
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும் கவுந்தி கூறுங் காதலி தன்னொடு | 25 |
தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென் றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும் யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் | 30 |
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர் ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் | 35 |
உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற் கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் | 40 |
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே யல்லால் இறந்தோர் பலரால் தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் | 45 |
தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோ னென்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ வல்லா டாயத்து மண்ணர சிழந்து | 50 |
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன் காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள் அடவிக் கானகத் தாயிழை தன்னை இடையிருள் யாமத் திட்டு நீக்கியது | 55 |
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச் சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே வருந்தா தேகி மன்னவன் கூடல் | 60 |
பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில் பெருங்கை யானை இனநிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கிற் போகிக் | 65 |
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில் குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின் | 70 |
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப் பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து | 75 |
தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு | 80 |
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு எற்படு பொழுதின் இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் தகை பாராட்ட வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு | 85 |
அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் | 90 |
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக் கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் | 95 |
காரர சாளன் வாடையொடு வரூஉம் கால மன்றியும் நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு | 100 |
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும் வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் | 105 | |||||||||||||||||||||||||
ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் | 110 | |||||||||||||||||||||||||
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமல ரேந்தத் தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து | 115 | |||||||||||||||||||||||||
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு பருவ மெண்ணும் படர்தீர் காலைக் கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க | 120 | |||||||||||||||||||||||||
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக் காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக் கோடையொடு புகுந்து கூட லாண்ட வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் | 125 | |||||||||||||||||||||||||
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் | 130 | |||||||||||||||||||||||||
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு | 135 | |||||||||||||||||||||||||
இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப் புலவிக் காலத்துப் போற்றா துரைத்த காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும் அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன | 140 | |||||||||||||||||||||||||
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும் செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் | 145 | |||||||||||||||||||||||||
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து மாத்திரை யறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.