பாட்டு
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் | 1 |
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் | 2 |
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் | 3 |
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ; தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்; இறுமென் சாயல் நுடங்க நுடங்கி | 1 |
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம்; வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் | 2 |
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; தையல் கலையும் வளையும் இழந்தே | 3 |
கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம்;
ஒன்றன் பகுதி
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் | 1 |
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் | 2 |
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;
ஆடுநர்ப் புகழ்தல்
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று;
உள்வரி வாழ்த்து
கோவா மலையாரம் கோத்த கடலாரம் | 1 |
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் | 2 |
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்; முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் | 3 |
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்;
முன்னிலைப் பரவல்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் | 1 |
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த | 2 |
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல | 3 |
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;
படர்க்கைப் பரவல்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் | 1 |
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே; பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் | 2 |
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் | 3 |
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே; என்றியாம், கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே. |
18. துன்ப மாலை
ஆங்கு, ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத் தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் | 5 |
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள்; அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடுந் தான்; | 10 |
எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; | 15 |
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ; தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் | 20 |
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; சொன்னது:- அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் | 25 |
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே எனக் கேட்டு, பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் | 30 |
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்; இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் | 35 |
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப | 40 |
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ; தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; | 45 |
காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி | 50 |
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். |
19. ஊர்சூழ் வரி
என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று பட்டேன் படாத துயரம் படுகாலை | 5 | |
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று | 10 | |
காதற் கணவனைக் கண்டா லவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி | 15 | |
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் | 20 | |
மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் | 25 | |
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும் மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் | 30 | |
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப் புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல்லென் ஒலிபடைத்த தூர்; வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் | 35 | |
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம் என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர் பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ | 40 | |
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப | 45 | |
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ | 50 | |
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம் | 55 | |
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் | 60 | |
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் | 65 | |
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான் எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான் மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் | 70 | |
தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன். | 75 |
20. வழக்குரை காதை
ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா | 5 |
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்துவீழ்தரும் நங்கோன்றன் கொற்றவாயில் | 10 |
மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்னவற் கியாம் உரைத்துமென ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் | 15 |
மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனுங்குறளும் ஊமுங்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் | 20 |
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால், வாயி லோயே வாயி லோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து | 25 |
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே; என வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி | 30 |
தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்வ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி | 35 |
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் | 40 |
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என வருக மற்றவள் தருக ஈங்கென | 45 |
வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோய்எனத் தேரா மன்னா செப்புவ துடையேன் | 50 |
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் | 55 |
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு | 60 |
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை | 65 |
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே தருகெனத் தந்து தான்முன் வைப்பக் | 70 |
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் | 75 |
மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று | 80 |
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. |
வெண்பா
அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் | 1 |
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் | 2 |
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் | 3 |
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன் கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். |
21. வஞ்சின மாலை
கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவுந் தெரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக | 5 |
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற | 10 |
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி | 15 |
மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் | 20 |
தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் | 25 |
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் | 30 |
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் | 35 |
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும் வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின் | 40 |
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து | 45 |
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் | 50 |
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய | 55 |
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர்.
வெண்பா
பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத் தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான்மறைந்தார் மற்று. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.