மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும் சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும் நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார் | 480 |
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த் தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப் பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த் தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார் | 481 |
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய் மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும் தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே | 482 |
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும் கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத் தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே | 483 |
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின் கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென் றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே | 484 |
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால் போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே | 485 |
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன் கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத் தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே | 486 |
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால் தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல் மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக் காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே | 487 |
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர் வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார் | 488 |
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய் மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும் விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக் கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான் | 489 |
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப் பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான் நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில் ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான் | 490 |
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும் நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும் வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன் நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான் | 491 |
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள் நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன் கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண் மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான் | 492 |
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந் தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச் சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான் | 493 |
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார் அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே | 494 |
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண் டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும் தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால் எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான் | 495 |
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம் சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர் சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார் | 496 |
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய் வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப் பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச் செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார் | 497 |
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப் புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும் எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார் | 498 |
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும் வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர் எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார் | 499 |
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக் கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் | 500 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.