கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 18 ஜூன், 2012

நீலகேசி, -32

198பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின்
மறைபொருள்கள் வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால்
குறையென்னை வான்வயிற்றாற்குண்டலமா கேசியித்
தறையகத்துப் பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ.


199பின்னசந் தானமும் பிறிதில் சந் தானமு
மின்னவென் றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச்
சொன்னதன் பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற்
கன்னதே யெனிலாதனாழிநாட் டாகாதோ.


200எண்ணிலாப் பலகந்த மிடையறா வென்றுரைப்பிற்
கண்ணுறா தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே
திண்ணிதா மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா
அண்ணறான் முடிந்தறக்கே டரியதே போலுமால்.


201வாசனையி னாமெனினும் வழியதனின் முதலதொன்
றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ
பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல்
லோசனையி னெடியதோ ருயிருரைத்தா யாகாயோ.


202பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும்
தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ
போதுரைத்த வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும்
மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ.


203சத்திதான் சென்றதே யென்றியே லைந்தன்றிப்
பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ
சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும்
பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ.


204அலைபலவே யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந்
தலைவனூல் பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க
ணிலைபெற வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன்
தலைவனீ பொருள்களேதானாட்ட லுறவினால்.


205கண்கொடுத்தான் றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தா னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான்
மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு
விண்கொடுத்தா னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள்.


206ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை
சாத கம்மிவை யென்று தலைத்தலை
யோகி னாணின் றொருபக லெல்லையுங்
கோதை வார்குழற் குண்டல கேசியே.


207நூலு நாரு மிசைத்தன வொத்தலா
னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு
மாலும் பேயு முடையவர் செய்கையே
போலு நீ சொன்ன புத்தர் சரிதையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;