208 | போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந் தாழ மின்றி யிவைதம்மி னோவென வாழு மாந்த ருழைவரு வாரில்லை கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ. |
209 | பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர னளத்தற் கேலவன் றானறி யும்பிற னுளத்தை யோரல னேலவன் றேவனாக் கிளத்த றானோர் கிழமையும் போலுமே. |
210 | யாவ னாயினு மன்னவ னின்மையிற் றேவ னென்று தெளியுந் தெளிந்தபின் சாவ னென்பதோர் சங்கைய மின்றியே யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே. |
211 | உறுதி யல்ல துணர்வடையான்றனக கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன் மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப் பெறுதி முன்னெடு பின்னியை யாதவே. |
212 | ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம வேத மில்சுட ரேற்றொரு தாமென்றான் சாத கம்மிவற் றானருள் சாதிப்பா னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே. |
213 | எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே கருது மாதனுங் கண் முத லாயின தருத லல்லது தங்குறை யீதெனார் மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே. |
214 | பாக மேபிளந் தாற்பர காயமொன் றாகு மேயென வீவ· தாதன்மை காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே யேக மெய்யும்விண் டாலியை யார்களே. |
215 | உள்ளந் தானிரு பாகினு முண்மையாற் கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங் கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமோ. |
216 | கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர் வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய் பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க டேறு வாருள ரோதெருண் டார்களே. |
217 | புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை சித்த னேயென்னைச் சேர்மின மென்றலி னத்த கன்னருள் செய்கல னாய்விடின் மத்த கம்பிளந் தானென்றன் மாயமே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.