ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
கண்ணு மணிஉறங்கு கானகத்து வண்டுறங்கு
பொன்னு மணிஉறங்கு பூமரத்து வண்டுறங்கு
வாசலிலே வன்னிமரம் வம்முசங்க ராசகுலம்
ராசகுலம் பெத்தெடுத்த ரத்தினமே கண்ணுறங்கு
பச்சை இலுப்பைவெட்டி பால்வடியும் தொட்டில்கட்டி
தொட்டிக்குமேல துணையிருப்பா மாரியம்மா
முத்திடிச்சு மாகொளிச்சு முத்தமெல்லாம் கோலமிட்டு
கோலமிட்ட திண்ணையிலே கோவலரே நித்திரைபோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.