தன்னானே நாதினம் தன்னானே –தன
தன்னானே நாதினம் தன்னானே
தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கர நான்தாறேன்
தில்லாலே என்று சொல்லுங்கடி
திங்க சக்கரை கொஞ்சம் நான்தாரேன்.
கடகடன்னு மழை பேய
கம்பளி தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலை பாருங்கடி.
குதிர வாரதப் பாருங்கடி –ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரை மேலதான் நம்மையா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி
நன்னயமாகவே கொண்டைகட்டி
நாகூரு லேஞ்சிய மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு –ஐயா
காசு பணமள்ளித் தாராரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.