கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கும்மிபாடல்


தன்னானே நாதினம் தன்னானே –தன
தன்னானே நாதினம் தன்னானே

தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கர நான்தாறேன்
தில்லாலே என்று சொல்லுங்கடி
திங்க சக்கரை கொஞ்சம் நான்தாரேன்.

கடகடன்னு மழை பேய
கம்பளி தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலை பாருங்கடி.

குதிர வாரதப் பாருங்கடி –ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரை மேலதான் நம்மையா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி

நன்னயமாகவே கொண்டைகட்டி
நாகூரு லேஞ்சிய மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு –ஐயா
காசு பணமள்ளித் தாராரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;